வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு


வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 1:36 AM IST (Updated: 27 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மங்களமேடு:

மங்களமேட்டை அடுத்த அய்யனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் அபிநாத்(20). இவர் அரும்பாவூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் ஹரிஹரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சின்னாறு பகுதியில் சென்றபோது, திடீரென அவரை வழிமறித்த 2 பேர் இரும்பு கம்பியால் அபிநாத்தை தாக்கி பள்ளத்தில் தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதுகுறித்து அபிநாத் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story