மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு

மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு
திருச்சி, நவ.28-
திருச்சி பெரியமிளகுப்பாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 11). மனவளர்ச்சி குன்றிய மற்றும் வாய் பேச முடியாத இவர் கடந்த 2 நாட்களாக காணவில்லை என திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை பெரியமிளகுப் பாறை நாயக்கர் தெருவில் உள்ள சேகர் என்பவரது வீட்டு கிணற்றில் சிவரஞ்சனியின் உடல் மிதந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனவளர்ச்சி குன்றிய சிறுமி சிவரஞ்சனி ஏற்கனவே பல முறை காணாமல் போனதாகவும், பின்னர் போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருச்சி பெரியமிளகுப்பாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 11). மனவளர்ச்சி குன்றிய மற்றும் வாய் பேச முடியாத இவர் கடந்த 2 நாட்களாக காணவில்லை என திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை பெரியமிளகுப் பாறை நாயக்கர் தெருவில் உள்ள சேகர் என்பவரது வீட்டு கிணற்றில் சிவரஞ்சனியின் உடல் மிதந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனவளர்ச்சி குன்றிய சிறுமி சிவரஞ்சனி ஏற்கனவே பல முறை காணாமல் போனதாகவும், பின்னர் போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story