ஒருவருக்கு கொரோனா


ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Dec 2021 7:59 PM GMT (Updated: 2 Dec 2021 7:59 PM GMT)

புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் அரியலூர் மாவட்டத்தில் ஒருவர் குணமாகி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். பெரம்பலூரில் நேற்று யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story