குடியாத்தம் காப்புக்காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு

குடியாத்தம் காப்புக்காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம என வனத்துைறயினர் அறிவுறுத்தி உள்ளனர்.
குடியாத்தம்
குடியாத்தம் காப்புக்காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம என வனத்துைறயினர் அறிவுறுத்தி உள்ளனர்.
காப்புக்காடுகள்
குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப்பகுதி ஆந்திர மாநில எல்லை வரை விரிந்து உள்ளது. குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது. தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
சிறுத்தையை பார்த்து ஓட்டம்
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி முதலியார்ஏரி பகுதியில் பாறைகள் மீது பெரிய சிறுத்தைகள் இரண்டு படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததை மாடு மேய்ப்பவர்கள் பார்க்கவே அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
அதேபோல் பரதராமியை அடுத்த கொட்டாளம் சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் இரண்டு பெரிய சிறுத்தைகள் பகல் நேரங்களில் சாலையை கடந்து சென்றது.
தனகொண்டபல்லி காட்டுப்பகுதியிலும், கொட்டாரமடுகு வனப்பகுதியிலும் சிறுத்தைகள் சுற்றித்திரிந்து வருகிறது.இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் கொட்டாரமடுகு, கல்லப்பாடி முதலியார்ஏரி, கொட்டாரம், கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சில தினங்களாக தண்டோரா மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விவசாயிகள் பீதி
அப்போது இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் பத்திரமாக வைத்திருக்கவும், தேவையில்லாமல் காப்புக்காடு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பெரும்பாலும் காப்புக்காட்டிற்க்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதால் சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story