லாரி மோதி குழந்தை பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மோதி குழந்தை பலியானது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி ராஜாத்தி. இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை அன்புச்செல்வன்.இந்த நிலையில் குழந்தைக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக குழந்தையை இருசக்கர வாகனத்தில் சுப்புராஜ், ராஜாத்தி கொண்டு சென்றனர். மடவார்வளாகம் விலக்கு அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியதில் குழந்தையும், பெற்றோரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குழந்தை அன்புச்செல்வன் உயிரிழந்தது.ராஜாத்தி, சுப்புராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக மராட்டியத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஷால் (35) கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story