ஆதார் பணிகள் தாமதமாவதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா வேதாரண்யத்தில் பரபரப்பு


ஆதார் பணிகள் தாமதமாவதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா வேதாரண்யத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Dec 2021 7:13 PM IST (Updated: 22 Dec 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் ஆதார் பணிகள் தாமதமாவதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம்:-

வேதாரண்யத்தில் ஆதார் பணிகள் தாமதமாவதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆதார் மையம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு நேற்று ஆதார் பதிவு செய்யவும், ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்யவும் 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். வேதாரண்யத்தில் 2 ஆதார் மையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் ஒரு மையம் செயல்படாததால் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மையத்தில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 
இங்கு டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் ஆதார் பணிகள் தாமதம் ஆனது.

அதிகாரிகள் உறுதி

வெகுநேரம் காத்திருக்க நேரிட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆதார் பணிகள் காலதாமதமாவதை கண்டித்து திடீரென தாசில்தார் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் ஆதார் பதிவுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story