130 மூடை ரேஷன் அரிசியுடன் 6 பேர் கைது

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சரக்கு வேனில் 130 மூடை ரேஷன் அரிசியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொட்டாம்பட்டி,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சரக்கு வேனில் 130 மூடை ரேஷன் அரிசியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர சோதனை
கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு நியாய விலை கடை களில் வழங்கப்படும் ரேஷன் அரிசி பயனாளிகளிடம் இருந்து சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கொட்டாம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொட்டாம்பட்டி அருகே உள்ள ஓட்டக்கோவில்பட்டியில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி மூடைகள் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு வேனை சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுற்றி வளைத்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை மடக்கி பிடித்தனர்.
கைது
விசாரணையில் அய்வத்தான்பட்டியை சேர்ந்த சேவுகன் (வயது50), சுரேஷ் (47), பிரபாகரன் (36), சதீஷ் (31), ஓட்டக் கோவில்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி (36), கருங்காலக்குடியை சேர்ந்த சுபேர் அலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 மூடை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 130 மூடை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்து உணவுகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story