தம்பதிக்கு கொரோனா


தம்பதிக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jan 2022 11:18 PM IST (Updated: 9 Jan 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கீழக்கரை,

கீழக்கரையை சேர்ந்த 7 பேர் துபாய் செல்வதற்காக ேநற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 36 வயதான கணவன், அவரது 28 வயது மனைவி ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் 2 பேரும் வீட்டிேலயே 7 நாட்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தகவல் அறிந்து துணை தாசில்தார் பழனிகுமார், நகராட்சி ஆணையர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் பூபதி ஆகியோர் தம்பதி வீட்டு பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர். யாரும் அங்கு செல்லாதவாறு இரும்பு தடுப்புகள் வைத்தனர்.

Next Story