களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்: டிரைவர் கைது


களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்: டிரைவர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 11:41 PM IST (Updated: 10 Jan 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டு, அதன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

களியக்காவிளை, 

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியில் செம்மண் கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அங்கு செம்மண் ஏற்றி கடத்திய டெம்போவை பறிமுதல் செய்து டிரைவர் அடைக்காகுழியை சேர்ந்த பெனிஸ் மோன் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story