ஊராட்சி துணைத்தலைவி கணவர் மின்சாரம் தாக்கி சாவு

வெள்ளிச்சந்தை அருகே ஊராட்சி துணைத்தலைவி கணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே ஊராட்சி துணைத்தலைவி கணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
ஊராட்சி துணைத்தலைவி கணவர்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 39), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர் வெள்ளிச்சந்தை ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வீட்டில் கிரைண்டர் பழுதாகி இருந்தது. அதை நேற்று சந்திரசேகர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே குடும்பத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதுபற்றி வெள்ளிசந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் ேபரில் போலீசார் விரைந்து வந்து சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story