மைனர் பெண்ணை தாயாக்கிய அக்காள் கணவர் கைது - குழந்தை உயிரிழந்த சோகம்

சிவமொக்காவில், மைனர் பெண்ணை தாயாக்கிய அக்காள் கணவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தது.
சிவமொக்கா:
டாக்டர்கள் தீவிர விசாரணை
சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது மைனர் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், முதலில் அந்த மைனர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண்ணுக்கு 7 மாதத்திலேயே குழந்தை பிறந்திருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அந்த மைனர் பெண்ணிடம் டாக்டர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த பெண்ணுக்கு ஒரு அக்காளும், ஒரு அண்ணனும் உள்ளனர்.
அக்காள் கணவர்
இதில் அக்காளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் தனது கணவருடன் தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி இந்த மைனர் பெண் அவரது வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது இவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரது அக்காள் கணவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது சீண்டல்களை இந்த மைனர் பெண் ரசிக்கவே, அது அவருக்கு சாதகமாகிவிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மைனர் பெண்ணிடம் அவளுடைய அக்காள் கணவர் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.
மைனர் பெண் கர்ப்பம்
இந்த நிலையில் மைனர் பெண் கர்ப்பம் அடைந்தார். அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படவே அவருடைய பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதை வெளியில் கூறாத குடும்பத்தினர், மைனர் பெண்ணிற்கு 18 வயது நிரம்பிவிட்டதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதுபற்றி மைனர் பெண் தரப்பில் கும்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணின் அக்காள் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆண் குழந்தை செத்தது
இந்த நிலையில் அந்த மைனர் பெண்ணுக்கு 7-வது மாதத்திலேயே பிரசவவலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அந்த மைனர் பெண் பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த மைனர் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த குழந்தை பரிதாபமாக நேற்று உயிரிழந்தது.
கைது
இதையடுத்து அந்த மைனர் பெண்ணின் அக்காள் கணவரை கும்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மைனர் பெண் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story