கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 1:05 AM IST (Updated: 10 Feb 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர், 
கரூர் வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மடை அருகே கஞ்சா  விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பசுபதிபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 31), கார்த்திகேயன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story