திருவாரூரில், சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர்:
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கோரிக்கை விளக்கி பேசினார்.
கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த செய்யப்படாத தொடக்க வேளாண்மை கடன் சங்க ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய ஒப்பந்தம் செய்திட வேண்டும்.
பணி வரன் முறை செய்யாத ஊழியர்களுக்கு உடன் பணி வரன் முறைப்படுத்திட வேண்டும். பணிசுமையுடன் வேலை செய்யும் ரேஷன் கடைகளுக்கு ஊழியரை நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவீந்திரன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story