திமிரி அருகே லாரிமோதி வாலிபர் பலி


திமிரி அருகே லாரிமோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2022 12:15 AM IST (Updated: 16 Feb 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திமிரி அருகே லாரிமோதி வாலிபர் பலியானார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமியைச் சேர்ந்தவர் சிவகாமி, கூலித்தொழிலாளி. இவரது மகன் சூரியா (வயது 22).  நேற்று காலை அதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் வெங்கடேசன் டிராக்டரை பழுது பார்ப்பதற்காக ஆரணி நோக்கி சென்றுள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் தனியாக சூர்யா பின்தொடர்ந்து சென்றுள்ளார். தாமரைப்பாக்கம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது வெங்கடேசன் டிராக்டரை நிறுத்தியுள்ளார்.

அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சூரியா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். 

இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story