தமிழக மீனவர்கள் 47 பேர் விமானத்தில் நாளை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 47 பேர் விமானத்தில் நாளை வருகிறார்கள்.
ராமேசுவரம்,
ராமசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 6 விசைப்படகு மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25-ந் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமே சுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இலங்கை சிறையில் நாகை மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 44 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story