தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சுத்தமல்லியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் திருமால் (வயது 41). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் முத்துராமலிங்கம் (40) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே முத்துராமலிங்கம் அவதூறாக பேசி திருமாலை கத்தியால் குத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி திருமால் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கெரட் திரேசா வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தார்.
Related Tags :
Next Story