விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு


விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 10 March 2022 11:51 PM IST (Updated: 10 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிாிழந்தாா்.

விக்கிரவாண்டி, 

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மோகன்(வயது 35). இவர் நேற்று முன்தினம் செஞ்சி அருகே உள்ள செ.குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்று வரும் அங்காளம்மன் கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக தனது மனைவியுடன் வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் மோகன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Next Story