போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2022 3:34 AM IST (Updated: 11 March 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

நெல்லை:
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் நல சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் முத்து, செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் குருசாமி வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிலாளர்களின் சம்மேளன கவுரவ தலைவர் லட்சுமணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம், குடும்ப நல நிதி ஏற்படுத்திட வேண்டும். ஓய்வூதியர் இறப்பிற்கு பின் முன்கூட்டுத்தொகை பிடித்தம் செய்வதை நிறுத்தவேண்டும். பிடித்த தொகையை திருப்பித் தர வேண்டும். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு அளித்திட வேண்டும். மத்திய அரசு வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் நல சங்கங்களின் மாநில பேரவை தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சந்திரசேகரன்  மற்றும் சுடலைமுத்து, ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story