பிச்சி பூ விலை கிடுகிடு உயர்வு

தோவாளை மார்க்கெட்டில் பிச்சி பூ விலை உயர்ந்து கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
தோவாளை மார்க்கெட்டில் பிச்சி பூ விலை உயர்ந்து கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, ஆவரைக்குளம் பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் தோவாளைக்கு வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கிச் ெசல்வார்கள். மேலும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிச்சி விலை உயர்வு
நேற்று முன்தினம் ரூ.1,100-க்கு விற்பனையான பிச்சி பூ நேற்று ரூ.650 உயர்ந்து ரூ.1,750-க்கும், ரூ.1000-க்கு விற்பனையான முல்லை ரூ.500 உயர்ந்து ரூ.1,500-க்கும் விற்பனையானது. இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் பிச்சி, முல்லையின் விலை உயர்ந்து காணப்பட்டது என்றார்.
விலை விவரம்
தோவாளை மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளிப்பூ ரூ.230, வாடாமல்லி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.40, சம்பங்கி ரூ.100, ரோஜா (100 எண்ணம்) ரூ.15, பட்டன்ரோஸ் ரூ.80, துளசி ரூ.45, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.10, பச்சை ரூ.7, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து (கட்டு) ரூ.110, மஞ்சள்கேந்தி ரூ.40, சிவந்தி (மஞ்சள்)ரூ.150, சிவந்தி(வெள்ளை) ரூ.160, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.200 என விற்பனையானது
Related Tags :
Next Story