விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பெரம்பலூர்:
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் பல திறன் மேம்பாட்டு செயல்பாடுகளின் வரிசையின் கீழ் கைத்தறிக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு மையத்தின் இயக்குனரான ஜானகிராமன் தலைமை தாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நெசவு தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு கை கொடுப்போம் என்று மாணவ-மாணவகளிடையே பேசினார். மேலும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளி பேசினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story