காரிமங்கலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப தகராறு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மனைவி தெய்வானை (வயது 43). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த தெய்வானை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை தெய்வானை வீட்டுக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அபபோது குடும்ப தகராறு காரணமாக தெய்வானை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், தெய்வானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story