இலவச வேட்டி- சேலை வழங்கும் விழா


இலவச வேட்டி- சேலை வழங்கும் விழா
x
தினத்தந்தி 16 March 2022 12:57 AM IST (Updated: 16 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் இலவச வேட்டி- சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

அம்பை:
அம்பை நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. இதை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் 17-வது வார்டு புதுகிராமம் தெருவில் உள்ள ரேஷன் கடையில் அப்பகுதி பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலையுடன் இனிப்பு வழங்கினார். இதில் துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் மாரியம்மாள் கணேசன், ராமசாமி, கோதர் இஸ்மாயில், சவுராபானு, அழகம்மை, ஜோதி கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல் அம்பை அய்யனார்குளம் ரோட்டில் உள்ள ஒரு ரேஷன் கடையிலும், சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய வீடு வழங்கும் திட்டத்தில், வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி அம்பை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அம்பை நகராட்சியை சேர்ந்த 31 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை என்ஜினீயர் மாடசாமி, நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், பள்ளக்கால் பஞ்சாயத்து தலைவர் ராம் சந்துரு மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story