அரக்கோணத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்


அரக்கோணத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 16 March 2022 9:52 PM IST (Updated: 16 March 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

அரக்கோணம்

அரக்கோணத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

அரக்கோணத்தில் ஜோதி நகர்- திருத்தணி ரோட்டில் அரசுக்கு சொந்தமான பாட்டை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டிருந்தது.
 
அதன்படி அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் முன்னிலையில் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். அப்போது அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம் ஆகியோர் இருந்தனர். அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story