சாராயம் விற்ற முதியவர் கைது

x
தினத்தந்தி 21 March 2022 11:58 PM IST (Updated: 21 March 2022 11:58 PM IST)


சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த காளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காளி செட்டித்தெருவை சேர்ந்த பாரூக் (வயது 60) என்பதும், அவர் சாராயம் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து பாரூக்கை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டர் புதுச்சேரி சாராயத்த பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire