சங்கரன்கோவில்:விபத்தில் காயம் அடைந்த விவசாயி சாவு


சங்கரன்கோவில்:விபத்தில் காயம் அடைந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 22 March 2022 3:47 AM IST (Updated: 22 March 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 52). விவசாயியான இவர் கடந்த 18-ந் தேதி சங்கரன்கோவிலில் இருந்து வடக்கு ஆலங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நொச்சிகுளம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story