பஸ் மோதி போலீஸ்காரர் பலி


பஸ் மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 25 March 2022 11:21 PM IST (Updated: 25 March 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகேபஸ் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

தக்கலை, 
களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் அனிராஜ் (வயது28). இவர் நாகர்கோவில் ஆயுத படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அனிராஜ் நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். இரவு 9.30 மணியளவில் தக்கலையை கடந்து வெள்ளிக்கோட்டில் வந்த போது எதிரே வந்த ஆம்னி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனிராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ெசல்லும் வழியில் அனிராஜ் பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த திருவனந்தபுரம், கல்லறா பகுதியை சேர்ந்த ரெதீஷ் (34) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அனிராஜ்க்கு செர்பியா ஜிபி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

Next Story