வாகனம் மோதி தொழிலாளி பலி


வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 March 2022 2:56 AM IST (Updated: 26 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் பிலிமிசை கிராமத்தில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு இலுப்பைக்குடி கிராமத்திற்கு முருகேசன் வந்து கொண்டிருந்தார். கூத்தூர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story