விஷம் குடித்து பெண் தற்கொலை

கூத்தாநல்லூர் அருகே கணவர் தாக்கியதால் மனம் உடைந்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே கணவர் தாக்கியதால் மனம் உடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, பூதமங்கலம், கோட்டகத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மனைவி கண்மணி (வயது34). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது தனபாலன் தனது மனைவி கண்மணியை தாக்கியதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இதில் மனமுடைந்த கண்மணி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு கீழே மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று கண்மணியை மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கண்மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை வீரமணி கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.
Related Tags :
Next Story