பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து புதுப்பெண் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து புதுப்பெண் இறந்தார்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 27). பட்டதாரியான இவருக்கும், பொம்மிடி அருகே உள்ள ஜங்காலபட்டியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டிற்கு வந்த கவுசல்யா தோட்டத்தை சுற்றி பார்க்க சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யா கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் இறந்ததால் அரூர் உதவி கலெக்டர் முத்தையன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story