கிருஷ்ணகிரி பழைய டவுன் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு


கிருஷ்ணகிரி பழைய டவுன் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 2 April 2022 10:15 PM IST (Updated: 2 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி பழைய டவுன் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் பலியானார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழைய பேட்டை டவுன் பஸ் நிலையம் அருகில் கடந்த 28-ந் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story