50 கிலோ குட்கா கடத்தியவர் கைது

50 கிலோ குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் கனகம்மாசத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரக்கோணத்திலிருந்து திருவலங்காடு வழியாக ராமஞ்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவருடைய பையில் இருந்த 50 கிலோ எடை கொண்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்த நீலகண்ட(வயது 39) என்பதும் கடையில் வியாபாரத்திற்காக குட்கா கடத்திச் சென்றதும் தெரியவந்தது. பின்னர் நீலகண்டனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story