பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது


பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 12:43 AM IST (Updated: 5 April 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

பிக்பாக்கெட் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் அனில்குமார்(வயது 44). இவர் தனியார் பால்பண்ணை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.200-ஐ பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதனை பார்த்த அனில்குமார், அவரை பிடித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த மணிகண்டன் (35) என்பது தெரிய வந்தது.

Next Story