சாலையில் உலா வந்த காட்டெருமை

சாலையில் உலா வந்த காட்டெருமை
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டுயானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டுயானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன.
இந்தநிலையில் ஊட்டி-குன்னூர் சாலையில் அருவங்காடு போலீஸ் நிலையம் எதிரே இன்று காலை 8 மணியளவில் காட்டெருமை உலா வந்தது. மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லும் நேரத்தில் காட்டெருமை உலா வந்ததால் அந்த வழியாக சென்றவர்கள் பீதியடைந்தனர். இதற்கிடையே அந்த வழியாக சென்ற சிலர் சுற்றுலா பயணிகள் காட்டெருமையை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் சிலர் ‘செல்பி’ எடுக்க முயன்றனர். இதனால் காட்டெருமை சற்று மிரண்டது. உடனே சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர். எனவே வனவிலங்குகள் சாலையில் நடமாடினால் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story