தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற பெண் சிக்கினார்


தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 24 April 2022 8:18 PM IST (Updated: 24 April 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் முள்ளக்காடு சாமிநகர் பகுதியை சேர்ந்த அனந்தம்மாள் (வயது 57) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலிசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story