ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது


ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 25 April 2022 10:27 PM IST (Updated: 25 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்

ஆம்பூர் தாலுகா போலீசார் நாயக்கனேரி ஊராட்சி மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைவான இடத்தில் இருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். 

விசாரணையில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 36) என்பதும், சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணனை  போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story