விவசாய நிலத்தில் மோட்டார் திருடிய வாலிபர் கைது


விவசாய நிலத்தில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 11:39 AM IST (Updated: 26 April 2022 11:39 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்தில் மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு, 

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 51). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பொதட்டூர்பேட்டை ஏரிக்கரை அருகே உள்ளது. இந்த நிலத்தில் மின் மோட்டார் வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நிலத்துக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மின் மோட்டார் மற்றும் பாம்புகளை காணவில்லை.

இதுகுறித்து அவர் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி பொதட்டூர்பேட்டை காலனி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடுபோன மின்மோட்டார், பம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை பள்ளிப்பட்டு மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.

Next Story