ரூ.20 லட்சத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


ரூ.20 லட்சத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 27 April 2022 11:19 PM IST (Updated: 27 April 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே சித்தனங்குடி ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சித்தனங்குடி ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார். 
தூர்வாரும் பணிகள் 
கூத்தாநல்லூர் அருகே  சித்தனங்குடி ஊராட்சியில் உள்ள கர்ணாவூர் மற்றும் ஓகைப்பேரையூர் கிராம பனையனார் வடிகால் வாய்க்கால், அனுமன் கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்தநிலையில் நேற்று சித்தனங்குடி ஊராட்சி கர்ணாவூர் கிராமத்திற்குட்பட்ட பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்  சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உழவர் குழுக்களின் கண்காணிப்பு 
ஆய்வின்போது பணிகள் குறித்து பொறியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், 
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க, இந்தாண்டு காவிரி டெல்டா பகுதியின் 10 மாவட்டங்களில் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 
150 பொக்லின் எந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்தமாதம்(மே) 31-ந்தேதிக்குள்  முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை தூர்வாரும் பணிகள் அந்தந்த பகுதியில் உள்ள உழவர் குழுக்களின் கண்காணிப்பு மற்றும் அவர்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
115 பணிகள் 
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரானது அனைத்து கடைமடை பகுதிகளுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 115 பணிகள் எடுக்கப்பட்டு 1200.56 கி.மீ. தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் இட ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால், அதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள், உழவர் குழுக்கள், கிராம மக்கள் உடனிருந்தனர்.

Next Story