மசூதிக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை

மசூதிக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொக்கொட்டு பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு தினமும் அதிகாலையில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து உல்லால் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா நிட்டே பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story