சாத்தனூர் காளகஸ்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சாத்தனூர் காளகஸ்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூரில் காளகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் மாத சிவராத்திரி வழிபாடு மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன், பார்வதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, மங்கள பொருட்கள், சீர்வரிசை பொருட்கள் மற்றும் விபூதி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story