பவானி அருகே வாகனங்கள் மோதி 2 பேர் சாவு; போலீஸ் விசாரணை


பவானி அருகே வாகனங்கள் மோதி 2 பேர் சாவு; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 May 2022 3:09 AM IST (Updated: 3 May 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே வாகனங்கள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி
பவானி அருகே வாகனங்கள் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பேர் பரிதாபமாக இறந்தார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மனநலம் பாதித்தவர்கள்
பவானி வரதநல்லூர் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இந்தநிலையில் பவானி மேட்டூர் ரோட்டில் அவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக இறந்தார். 
இதேபோல் பவானி அடுத்த திப்பி செட்டிபாளையம் பகுதியில் அய்யன் தோட்டம் என்கிற இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சுற்றிக்கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவரும் துடிதுடித்து இறந்தார். 
தீவிர விசாரணை
அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி இறந்த ஆணும், பெண்ணும் யார்?  எந்த ஊர்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. 
பவானி போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி ஆணின் உடலை பவானி அரசு மருத்துவ மனைக்கும், பெண்ணின் உடலை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். மேலும் இறந்தவர் யார்?, அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனங்கள் எது? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story