அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு பசுவும் இறந்த பரிதாபம்

பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பசுவும் இறந்தது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பசுவும் இறந்தது.
சூறாவளி காற்றுடன் மழை
அணைக்கட்டு மற்றும் பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே புளிய மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது.
கந்தனேரியை அடுத்த கழனிபாக்கம் ஏரி கோடி பகுதியில் மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தின் மீது விழுந்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் யாரும் கவனிக்கவில்லை.
இந்த நிலையில் ஏரிகோடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி யன் (வயது 56) என்பவர் நேற்று காலை 8 மணி அளவில் தனது பசு மாட்டை மேய்ச்சலுக்காக நிலத்தின் வழியாக ஓட்டிச் சென்றார்.
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
அப்போது மின்கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் அதனை சுப்பிரமணியன் மிதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் பசுவுடன் சுப்பிரமணி தூக்கி வீசப்பட்டார். இதில் சுப்பிரமணி இறந்ததோடு அவரது பசுமாடும் பலியானது.
தகவல் கிடைத்தவுடன் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மின்வாரியத்தினர் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டபின், சுப்பிரமணியன் உடலை அவர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பசுமாட்டின் உடலையும் கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார்.
போலீஸ் விசாரணை
சுப்பிரமணியன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story