ஓசூரில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் தொழிலாளி கைது


ஓசூரில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 9 May 2022 11:36 PM IST (Updated: 9 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஓசூர்:
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது42). தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக இருந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று ஓசூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜான் பாஷாவை கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story