வேலை கிடைக்காததால் தையல் தொழிலாளி தற்கொலை


வேலை கிடைக்காததால் தையல் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2022 7:28 PM GMT (Updated: 9 May 2022 7:28 PM GMT)

வேலை கிடைக்காததால் தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மலைக்கோட்டை, மே.10-
வேலை கிடைக்காததால் தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தையல் தொழிலாளி
திருச்சி இ.பி.ரோடு பாரதியார் தெரு பாய்தோப்பை சேர்த்தவர் சங்கர் (வயது 27). தையல் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் இந்த நிலையில் சங்கருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் வருமானம் இன்றி தவித்த அவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமை ஆனார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story