சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 May 2022 10:31 PM IST (Updated: 11 May 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். தள்ளுவண்டி கடைகள், கடையின் முன்பு மேற்கூரைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த ஆக்கிரமிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. எனினும், அவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். 

அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில் நேற்று உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இனி வரும் நாட்களில் ஆக்கிரமிப்பை தொடர்ந்து செய்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story