மின்சாரம் தாக்கி யானை சாவு: மின்வேலி அமைத்த விவசாயி கைது


மின்சாரம் தாக்கி யானை சாவு: மின்வேலி அமைத்த விவசாயி கைது
x
தினத்தந்தி 14 May 2022 10:54 PM IST (Updated: 14 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் தாக்கி யானை இறந்தது தொடர்பாக மின்வேலி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52) விவசாயி. இவர் தனது நெல் வயலில் வன விலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க நிலத்தை சுற்றி மின்வேலி, மின்விளக்கு அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து நெல் வயலுக்கு வந்த 40 வயது மக்னா யானை மின்சாரம் தாக்கி இறந்தது. இதுதொடர்பாக பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சீனிவாசன் அனுமதியின்றி நிலத்திற்கு மின்வேலி, மின்விளக்கு அமைத்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சீனிவாசன் நேற்று மாரண்டஅள்ளி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story