திருச்செந்தூரில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

திருச்செந்தூரில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வண்ணாந்திரவிளையைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் காந்தி (வயது 45). குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவர் அவ்வப்போது திருச்செந்தூர் ஆவுடையார்குளம் அருகில் உள்ள கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.
நேற்று மதியம் காந்தி மது அருந்துவதற்காக ஆவுடையார்குளம் கிணற்றின் ஓரத்தில் சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் தத்தளித்த அவர் உயிருக்கு போராடினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி காந்தியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காந்தி இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த காந்திக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
Related Tags :
Next Story