பிளஸ்1 பொதுத்தேர்வு 11 ஆயிரத்து 201 பேர் எழுதினார்கள்


பிளஸ்1 பொதுத்தேர்வு 11 ஆயிரத்து 201 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 16 May 2022 4:15 PM GMT (Updated: 16 May 2022 4:15 PM GMT)

பிளஸ்1 பொதுத்தேர்வு 11 ஆயிரத்து 201 பேர் எழுதினார்கள்

திருப்பூர்:
பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று உயிரியல் தேர்வு எழுத 7 ஆயிரத்து 33 பேர் விண்ணப்பித்து 6 ஆயிரத்து 819 பேர் எழுதினார்கள். 214 பேர் தேர்வு எழுதவரவில்லை. இதுபோல் தாவரவியல் தேர்வு எழுத 444 பேர் விண்ணப்பித்து 389 பேர் எழுதினார்கள். 55 பேர் தேர்வு எழுத வரவில்லை. வரலாறு தேர்வை 2 ஆயிரத்து 894 பேர் விண்ணப்பித்து 2 ஆயிரத்து 528 பேர் எழுதினார்கள். 366 பேர் எழுதவரவில்லை. இதுபோல் வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தேர்வை 1,101 பேர் விண்ணப்பித்து 1,082 பேர் எழுதினார்கள்.
எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாட தேர்வை 15 பேரும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாட தேர்வை 125 பேரும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி தேர்வை 43 பேரும், ஆபிஸ் மேனஜ்மென்ட் மற்றும் செகரட்டரிசிப் பாட தேர்வை 200 பேரும் எழுதினார்கள். மொத்தம் 11 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்து 11 ஆயிரத்து 201 பேர் எழுதினார்கள். 698 பேர் தேர்வு எழுதவில்லை.


Next Story