மக்கள் நல பணியாளர்கள் வழக்கு: தமிழக அரசின் மனு மீது மார்ச் மாதம் இறுதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மக்கள் நல பணியாளர்கள் வழக்கு: தமிழக அரசின் மனு மீது மார்ச் மாதம் இறுதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2019 9:15 PM GMT (Updated: 29 Nov 2019 8:23 PM GMT)

மக்கள் நல பணியாளர்கள் வழக்கு தொடர்பாக, தமிழக அரசின் மனு மீது இறுதி விசாரணையை மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதுவரை ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.

Next Story