சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்- நிதின் கட்காரி


சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்- நிதின் கட்காரி
x
தினத்தந்தி 6 May 2020 5:16 PM IST (Updated: 6 May 2020 5:16 PM IST)
t-max-icont-min-icon

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.

புதுடெல்லி

கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமை மண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளிலிருந்து நிவாரணம் வழங்கியுள்ளது. பிரத்தியேக விஷயங்களைத் தீர்மானித்த மாநில அரசுகள், சில தொழில்துறை துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதித்து உள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்,

பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் கட்காரி சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

எவ்வாறாயினும், பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போது சமூக தூரத்தை பராமரிப்பது மற்றும் கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முககவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவது குறித்த எச்சரிக்கை பின்பற்றப்படும் எனதெரிவித்தார்.

ஆனால் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை.

கொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான நாட்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலதிக நேரம் பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கட்கரி கூறினார்.

Next Story