சார்ஸ், கோவ்-2 வைரஸ்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்து இருக்கலாம்.

சார்ஸ், கோவ்-2 வைரஸ்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
பெங்களூரு
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடு இந்தியா ஆகும்.
நடப்பு அறிவியலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவில் சார்ஸ், கோவ்-2 வைரஸ்களின் தோற்றத்திற்கான ஆதாரம் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியங்களைத் தவிர ஐரோப்பா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த நாடுகளாகும் என கூறப்பட்டு உள்ளது.பெங்களூரு, இந்திய அறிவியல் கழகம், நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறையைச் சேர்ந்த மைனக் மொண்டல்,
அங்கிதா லாவர்ட் மற்றும் குமரவேல் சோமசுந்தரம் ஆகியோரின் ஆய்வு கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
இந்திய சார்ஸ், கோவ்-2 இன் மரபியல்: மரபணு பன்முகத்தன்மை, சாத்தியமான தோற்றம் மற்றும் வைரஸின் பரவல்’ ஆகியவற்றின் தாக்கங்கள் ஐரோப்பா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வைரஸ் பரவி உளதிளது என் நிராகரிக்க முடியாது என்று கூறுகிறது.
மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு கொரோனாவை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது. மாறுபட்ட இடங்களிலிருந்து மரபணு வரிசைமுறைகளை ஒப்பிடுவது வைரஸ்களிடையே மரபணு வேறுபாட்டை அடையாளம் காண அனுமதித்தது.
"வைரஸின் மூலத்திற்கும் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் எங்கள் முடிவு சுட்டிக்காட்டுகிறது. கொரோனா போன்ற தொற்று நோய்களைக் கண்டறிந்து நிர்வகிப்பதை மேம்படுத்த விரைவான வைரஸ் மரபணு வரிசைமுறை மற்றும் பொது தரவு பகிர்வு ஆகியவற்றின் ஆற்றலையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
வளர்ந்து வரும் பொருளாதாரங்களான பிரேசில் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நாடுகளும் சார்ஸ், கோவ்-2 நோய்க்கிருமி உருவாக்கம் குறித்த சோதனை ஆராய்ச்சியை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல தேவையில்லை, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். இந்திய சார்ஸ் மத்தியில் மரபணு வேறுபாட்டை தீர்மானிப்பதே ஆய்வின் நோக்கம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
Related Tags :
Next Story